நீ வரும் நாளை யாருக்கும் சொல்வதில்லைஆனாலும்
நீ வரும் வேளை கண்டு தோகை விரித்தாடியது மயில்கள் !
நீ வரும் நாளை யாருக்கும் சொல்வதில்லை ஆனாலும்
நீ வரும் வேளை வானில் தோன்றுவதில்லை நிலா !
நீ வரும் வேளை யாருக்கும் சொல்வதில்லை ஆனாலும்
நீ வந்து சென்ற நாள் மட்டுமே மண்ணில் முளைக்கும் காளானாய் !
இப்படி உனக்காகவே படைக்கப் பட்ட இயற்கைதான் எதனை எத்தனை ?
நிலவை ரசிக்கும் நான் உன்னையும் தான் காதலிக்கிறேன் !
நீ வரும் நாளுக்காக தவம் இருக்கிறேன்
உன்னை நான் கட்டி தழுவி முத்தமிட !
என் மேல் சாரலாய் விழும் உன்னை
நான் தழுவி கொண்டு உன்னில் என்னை தொலைக்க !
கோடையிலும் நான் காத்திருப்பேன்
என்னை நீ கட்டி தழுவுவாயா என்று !
என்னை படைத்த ஆண்டவன்
என் கண் முன் தோன்றினால்
நான் அவனிடம் கேட்பேன்
நீ வரும் வேளை மட்டுமே
நான் பிறக்க வேண்டும்
நீ மறையும் அந்த நொடியே
என்னுயிரும் பிரிந்திட வேண்டும் !
